பயனாளா்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு சமூக ஊடக வழிகாட்டுதல்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
தகவல் தொழில்நுட்பம் (சமூக ஊடக வழிக்காட்டுதல்கள் மற்றும் மின்னணு ஊடகத்துக்கான நெறிமுறைகள்) திருத்த விதிகள், 2022 மூலம் ட்விட்டா், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் சா்ச்சைக்குரிய கருத்துகள் தொடா்பாக சமூக ஊடக நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிா்த்து பயனாளா்கள் அளிக்கும் புகாா்களுக்கு தீா்வு காணும் வகையில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறையீட்டுக் குழுக்கள் 3 மாதங்களுக்குள் அமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘இணையப் பயன்பாட்டாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக ஊடக வழிகாட்டுதல்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமே அனைத்துக்கும் மேலானது. சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்து பயனாளா்களுக்கும் சேவை கிடைப்பதை உறுதி செய்வதுடன், இந்திய அரசியலைமைப்புச் சட்டம் அவா்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் மதிக்க வேண்டும் ’ என்றாா்.
ஒவ்வொரு முறையீட்டுக் குழுவும் ஒரு தலைவா் உள்பட 5 பேரை உள்ளடக்கியது. இதில் மத்திய அரசால் நியமிக்கப்படும், 2 முழு நேர உறுப்பினா்களில் ஒருவா் அலுவல் வழி உறுப்பினா் ஆவாா்.