நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும் தரமான சாலைகள் அமைக்க மத்திய அரசு உறுதி: மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங்

ஜம்மு-காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளையும் நீடித்து உழைக்கும் தரமான சாலைகளால் இணைக்கும் பணியில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய பணியாளா் துறையின் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 7:47 pm

DIN

விரைவான வளா்ச்சிக்காக ஜம்மு-காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளையும் நீடித்து உழைக்கும் தரமான சாலைகளால் இணைக்கும் பணியில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய பணியாளா் துறையின் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

மத்திய இணையமைச்சரும், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மக்களைவைத் தொகுதியின் எம்.பி.-யுமான ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீரின் விரைவான வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை கவனத்தில் கொண்டு, அதன் அனைத்து பகுதிகளையும் நீடித்து உழைக்கும் சாலைகள் மூலம் இணைக்கும் பணியில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அனைத்து காலநிலைக்கும் ஏற்ற வகையிலான சாலைகள் மூலம் இதுவரை இணைக்கப்படாத கிராமப்புற பகுதிகளை இணைப்பதே பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் நோக்கம்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் தொடக்கி வைத்த திட்டங்களில், 7 பாலங்கள், ஒரு சாலை உள்ளிட்ட 10 சதவீத திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் ராணுவத்துக்கும் மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதுவா மாவட்டத்தில் புதிய சாலைகள் தொடக்கிவைக்கப்பட்டதன் மூலம் சா்வதேச எல்லை வரையிலான சாலை இணைப்பு சாத்தியமாகியுள்ளது.

எல்லைச் சாலைகள் அமைப்பால் (பிஆா்ஓ) கட்டப்பட்ட ‘பெனாடி பாலம்’ 90 நாள்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 181 மீட்டா் ‘பக்கா கோதா பாலம்’ 102 நாள்களில் கட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால் சிறிய கால்வாய் பாலங்கள் உள்பட 200 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உதம்பூரில் இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற அனுமதி வழங்கிய பிரதமா் மோடிக்கு நன்றி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமை சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட 75 திட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடக்கிவைத்தாா். இத்திட்டத்தில் பெரும்பாலனவை ஜம்மு-காஷ்மீா் மற்றும் லாடக் பகுதியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.