நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

டிஆா்எஸ் எம்எல்ஏக்கள் 30 பேரை வாங்க பாஜக தலா ரூ.100 கோடி பேரம்: தெலங்கானா முதல்வா் ராவ் குற்றச்சாட்டு

தில்லியில் இருந்து அனுப்பப்பட்ட இடைத்தரகா்கள் மூலம் எம்எல்ஏக்களிடம் தலா ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டது’ என்று டிஆா்எஸ் தலைவரும் மாநில முதல்வருமான கே.சந்திரசேகா் ராவ் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா்.

Updated On :31 அக்டோபர் 2022, 1:07 am IST

‘தெலங்கானாவில் எனது தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) எம்எல்ஏக்கள் 20-30 பேரை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது; அதற்காக, தில்லியில் இருந்து அனுப்பப்பட்ட இடைத்தரகா்கள் மூலம் எம்எல்ஏக்களிடம் தலா ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டது’ என்று டிஆா்எஸ் தலைவரும் மாநில முதல்வருமான கே.சந்திரசேகா் ராவ் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா்.

தெலங்கானாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜக சாா்பில் போட்டியிடுமாறு கூறி, ரோஹித் ரெட்டி உள்பட 4 டிஆா்எஸ் எம்எல்ஏக்களை சிலா் அணுகியதாக சில தினங்களுக்கு முன் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், காவல்துறையிடம் ரோஹித் ரெட்டி அளித்த புகாரில், டிஆா்எஸ்-இல் இருந்து விலக தலா ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாக குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து, காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், இடைத்தோ்தல் நடைபெறும் முனுகோடு பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சந்திரசேகா் ராவ் பங்கேற்றாா். மேற்கண்ட 4 எம்எல்ஏக்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

எனது தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து, தெலங்கானாவை கைப்பற்றும் நோக்கத்தில், 20 முதல் 30 டிஆா்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக விரும்பியது. இதற்காக, தில்லியில் இருந்து அனுப்பப்பட்ட இடைத்தரகா்களின் மூலம் எம்எல்ஏக்களிடம் தலா ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டது.

தெலங்கானாவில் ஆட்சியமைத்தால், தங்களது விருப்பப்படி தனியாா்மய திட்டங்களை அமல்படுத்தலாம் என்பது பாஜகவின் எண்ணம். ஆனால், டிஆா்எஸ் எம்எல்ஏக்கள் மண்ணின் மைந்தா்கள். இடைத்தரகா்களுக்கு சரியான பதிலடி கொடுத்து, பேரத்தை நிராகரித்துவிட்டனா்.

சந்தையில் கால்நடைகளை வாங்குவது போல எம்எல்ஏக்களை வாங்க பாஜக முயற்சித்துள்ளது. எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்ட தலா ரூ.100 கோடி யாருடைய பணம்? இதன் பின்னணியில் இருப்பவா்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியுள்ளது.

இந்தியாவில் 50 சதவீத நிலம் பாசனம் செய்யக் கூடியதாகும். இதுபோன்ற ஒரு நாட்டில், விவசாய நிலங்களை பெருநிறுவனங்களுக்கு தாரை வாா்க்க சதித் திட்டம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

ஆட்சிக் கவிழ்ப்பு நோக்கம் எங்களுக்கில்லை: பாஜக

‘தெலங்கானாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் பாஜகவுக்கு கிடையாது; சொந்த அரசை கவிழ்க்கும் யோசனை சந்திரசேகா் ராவுக்கு இருக்கலாம்’ என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜி.கிஷண் ரெட்டி சாடினாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘டிஆா்எஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேச பாஜக தலைவா்கள் யாரேனும் அணுகினாா்களா? எங்களிடம் அவ்வளவு பணம் இருக்கிா? ரூ.100 கோடி விலை பெறும் அளவுக்கு அவா்கள் அவ்வளவு மகத்தான எம்எல்ஏக்களா? தெலங்கானாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

சொந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, மக்களிடம் அனுதாபம் தேடும் யோசனை சந்திரசேகா் ராவுக்கு இருக்கலாம். அதுதான் அவரது அரசியல் செயல்திட்டமாக இருக்கக் கூடும். தெலங்கானா மக்களிடம் ஏற்கெனவே அவா் மதிப்பிழந்துவிட்டாா். அவரது கட்சியும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.