இந்நிலையில் இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘குஜராத் உயா்நீதிமன்றத்தில் தீஸ்தா தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு மாநில அரசு பதிலளிக்க ஆகஸ்டில் உத்தரவிட்டு 6 வாரங்களுக்குப் பிறகு விசாரணையை ஒத்திவைத்தது ஏன்? ஜாமீன் மனு மீதான விசாரணையில் தாமதம் ஏன்? குற்றம்சாட்டப்பட்ட பெண்களுக்கு இதேபோன்று தாமதம் ஏற்பட்ட வழக்குகள் உள்ளதா என்ற விவரங்களை வெள்ளிக்கிழமை 2 மணிக்கு நடைபெறும் இந்த வழக்கு விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனா்.