ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிஆர்பிஎப்-யின் கோப்ரா, ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.
குச்சாய் காவல் நிலையப் பகுதியில் உள்ள பருடா காட்டில் நடந்த நடவடிக்கையில் 2 சிபிஐ(மாவோயிஸ்ட்) சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கோல்ஹான் பிரிவின் துணை ஆணையர் அஜய் லிண்டா தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் சடலங்களை மீட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றது.