தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

இதுதான் எனது புதிய கட்சியின் முக்கிய நோக்கம், குலாம் நபி ஆசாத் அதிரடி

காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்ப பெறுவதே தனது புதிய கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:26 pm IST

காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்ப பெறுவதே தனது புதிய கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு குலாம் நபி ஆசாத் முதல் முறையாக பேரணி ஒன்றில் இன்று (செப்டம்பர் 4) கலந்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை திரும்பப் பெறுவது, ஜம்மு-காஷ்மீரில் உள்ளவர்களின் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பினை பாதுகாப்பது, நிலத்தின் மீதான அவர்களது உரிமையைப் பாதுகாப்பது மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மீண்டும் காஷ்மீரில் அமைதியாக வாழ ஏற்பாடு செய்வது போன்றவை அவர் தொடங்கவுள்ள புதிய கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வராக இருந்துள்ள குலாம் நபி ஆசாத்துக்கு அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸில் இருந்து விலகிய பல்வேறு முக்கியத் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அவருடன் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

ஜம்முவின் சைனிக் காலனியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு குலாம் நபி ஆசாத் பேசியதாவது: “ ஜம்மு-காஷ்மீர் மக்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டதற்கு பின்பே எனது புதிய கட்சியின் பெயரை அறிவிப்பேன். எனது புதிய கட்சி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதில் முதலில் முக்கியத்துவம் கொடுக்கும். பின்னர், ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும்.” என்றார்.

73 வயதாகும் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் 50 ஆண்டுகளாக இருந்துள்ளார். அவர் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி காங்கிரஸ் முழுவதுமாக அழிந்து வருகிறது எனவும், ராகுல் காந்தி அதனை அழித்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டி காங்கிரஸ் உடனான 50 ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.