தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி மாரடைப்பால் மரணம்

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானால் பணம் பெற்று கைது செய்யப்பட்ட பயங்கரவாதி சுப்ரன் உசேன், ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். 

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:24 pm IST

பாகிஸ்தானால் பணம் பெற்று இந்தியாவில் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி சுப்ரன் உசேன் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். 

கடந்த இரண்டு வாரங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற போது பாகிஸ்தானை சேர்ந்த சுப்ரன் உசேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

சுப்ரக் உசேன் அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தான். இதற்காக தீவிரவாத அமைப்பினர் அவனுக்கு பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது. 

சுப்ரன் உசேனிடம் விசாரணை நடத்தியதில் அவன் தனது கூட்டாளிகளுடன் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. 

இந்நிலையில்,சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்டம்பர் 3) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். 

கடந்த மாதம் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டார் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் சுப்ரக் உசேன் காயமடைந்தான். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் உசேன், இந்திய ராணுவச் சாவடி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.

2016 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் அவரது சகோதரர் ஹாரூன் அலியுடன் உசேன் கைது செய்யப்பட்டார், மேலும், மனிதாபிமான அடிப்படையில் 2017 நவம்பரில் அவர் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.