பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பஞ்சாப்: கண்காட்சியில் ராட்சத ராட்டினம் கீழே விழுந்ததில் 50 பேர் காயம்

பஞ்சாபில் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் கீழே விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :5 செப்டம்பர் 2022, 4:30 am

DIN

பஞ்சாபில் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் கீழே விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர். 

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள தசரா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத ராட்டினம் என பல்வேறு விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் கீழ்இருந்து மேலே செல்லும் ராட்டினம் ஒன்றில் நேற்று மக்கள் ஆர்வமுடன் அமர்ந்திருந்தனர். அந்த ராட்டினம் கிளம்பிய வேகத்தில் 50 அடி உயரத்தில் மேலே சென்றதும் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தில் ராட்டினத்தில் இருந்த குழந்தைகள் உள்பட 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கண்காட்சியில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் கடைபிடிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விபத்துக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.