12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து

மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை(செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :


மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை(செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 
ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை முதல் (செப்.6 முதல் செப்.10 வரை) 6 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. 

ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இதன் காரணமாக, மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை மதுரை சிறப்பு ரயில் ஆகியவை திங்கள்கிழமை முதல் (செப்.5 முதல் ரத்து செய்யப்படுகிறது. 

வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிமுழுமையாக நிறைவடைந்த உடன் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.