மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

'ராகுல் இந்தியா இணைப்புக்கு பதிலாக காங்கிரஸ் இணைப்பு நடைப்பயணம் மேற்கொள்ளலாம்'

பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், இந்தியா இணைப்பு நடைப்பயணம் தொடங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமரிசித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

News image
ராகுல் காந்தி
Updated On :7 செப்டம்பர் 2022, 1:43 pm

DIN


புது தில்லி: பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், இந்தியா இணைப்பு நடைப்பயணம் தொடங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமரிசித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

ராகுல் காந்தி, இந்தியா இணைப்பு நடைப்பயணத்துக்கு பதிலாக, காங்கிரஸ் இணைப்பு நடைப்பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்று அத்வாலே கூறியிருக்கிறார்.

மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கூறுகையில், இந்தியாவை ஒன்றிணைக்கும் பணியைத்தான் பிரதமர் நரேந்திர மோடி செய்து வருகிறார்.

எனவே, இந்தியா இணைப்பு நடைப்பயணத்துக்கு மாற்றாக, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்கும் நடைப்பயணத்தை மேற்கொள்ளலாம். நாட்டை ஒன்றிணைக்க அல்ல, அரசை உடைக்கவே ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார் என்றே நினைக்கிறேன் என்றும் அத்வாலே குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில், அத்வாலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.