நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மகன் உடலை உப்புக்குள் புதைத்த பெற்றோர்: இதையெல்லாமா நம்புவது?

சமூக வலைத்தளப் பக்கத்தில் வந்த தகவலைப் பார்த்த பெற்றோர், தங்களது உயிரிழந்த மகன் உயிர் பிழைக்க, உப்புக்குள் மகனின் உடலைப் புதைத்த விநோதம் நடந்தேறியுள்ளது.

News image

மகன் உடலை உப்புக்குள் புதைத்த பெற்றோர்

Updated On :7 செப்டம்பர் 2022, 4:56 pm IST


பல்லாரி: சமூக வலைத்தளப் பக்கத்தில் வந்த தகவலைப் பார்த்த பெற்றோர், தங்களது உயிரிழந்த மகன் உயிர் பிழைக்க, உப்புக்குள் மகனின் உடலைப் புதைத்த விநோதம் நடந்தேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சிர்வார் கிராமத்தில், குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உயிரை மீட்க, உப்பைக் கொட்டி மகனின் உடலை அதன் மீது வைத்து, மேலும் மகன் உடல் மூடும்படி உப்பைக் கொட்டி வைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தார். அப்போது, சமூக வலைத்தளம் ஒன்றில், உப்பில் உடலை புதைத்துவைத்தால் உயிர் பிழைக்கலாம் என்று வந்த பதிவை பெற்றோரும், கிராம மக்களும் உண்மை என நம்பி அவ்வாறே செய்துள்ளனர்.

இது குறித்து சிறுவனின் உறவினர் கூறுகையில், அண்மையில், இப்படி ஒரு பதிவை அந்தச் சிறுவனின் பெற்றோர் படித்துள்ளனர். இந்த நிலையில்தான் தங்களது மகன் உயிரிழந்துவிட்டதால், அவனை மீட்க இவ்வாறு செய்ய முயன்றனர்.

இதற்காக நாங்கள் 10 கிலோ உப்பு வாங்கி வந்து சிறுவனின் உடலை அதில் மூடி வைத்தோம். சுமார் 6 மணி நேரம் காத்திருந்தும் எதுவும் நடக்கவில்லை.

இதுபற்றி கிராம மக்கள் காவல்துறைக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் தந்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்த நிலையில், கிராமத்தில் இருந்த இடுகாட்டில் சிறுவனின் இறுதிச் சடங்குகள் நடத்தி, உடல் எரியூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.