ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரிட்டன் அரசி மறைவு: செப்.11இல் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிப்பு

உடல்நலக்குறைவால் மறைந்த பிரிட்டனின் நீண்ட கால அரசியான எலிசபெத் மறைவிற்கு நாட்டில் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

News image

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்

Updated On :9 செப்டம்பர் 2022, 10:30 am

DIN

உடல்நலக்குறைவால் மறைந்த பிரிட்டனின் நீண்ட கால அரசியான எலிசபெத் மறைவிற்கு நாட்டில் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பிரிட்டனின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. அவரது மறைவிற்கு உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 11ஆம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அந்நாளில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.