பாஜகவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டேன்: சரத்பவார் 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி “ஆளும் பாஜகவிடம்” ​​ஒருபோதும் சரணடையாது என்றும், பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியவர்,
பாஜகவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டேன்: சரத்பவார் 
Published on
Updated on
2 min read

புது தில்லி: பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி “ஆளும் பாஜகவிடம்” ​​ஒருபோதும் சரணடையாது என்றும், பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர், காவி கட்சியை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) எட்டாவது தேசிய மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் சரத்பவார், அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் போராட்டங்களைக் கையாண்ட விதம் மற்றும் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான "வெறுப்பை தூண்டுவது" குறித்து மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.

அமலாக்க இயக்குநரகம், சிபிஐ மற்றும் பணபலம் போன்ற மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் தற்போதைய மத்திய அரசை நாம் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வது சவால் ஒன்றாகும்.  நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், சஞ்சய் ராவத், நவாப் மாலிக், அபிஷேக் பானர்ஜி, சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ளனர்.

மோடி அரசாங்கம் அவர்கள் செய்த முறைகேடுகளுக்காக விசாரிக்கப்படுவதாகக் கூறினாலும், எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளன.

மாநாடு நடைபெற்ற தல்கடோரா உள்விளையாட்டு அரங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பவார், "இந்த இடத்தில்தான் பாஜிராவ் பேஷ்வா 1737 இல் தனது படையுடன் முகாமிட்டு தில்லியின் ஆட்சியாளர்களுக்கு சவால் விடுத்தார்," என்று கூறினார்.

மேலும், நாடு முழுவதும் வரவிருக்கும் ஊரக உள்ளாட்சி, நகர, மாநகராட்சி தேர்தல்களில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பவார் வலியுறுத்தினார்.

மேலும், தில்லியில் தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தேசியவாத காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் தீரஜ் சர்மா மற்றும் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் சோனியா டூஹன் ஆகியோரை அவர் பாராட்டினார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மூத்த தலைவர் தனது கட்சித் தொண்டர்களை ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் வியூகம் வகுக்க வேண்டும்,  சாமானியர்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் கூட்டு போராட்டத் திட்டங்களை மேற்கொள்வதற்கும், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைப்பதில் வலுவான பங்கை ஆற்றுவதற்கு பவார் தனித்துவமாக வைக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக சரத்பவார் போட்டியிட மாட்டார். அவர் ஒருபோதும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரவில்லை. ஆனால், அவர் எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே பின்பற்றினார். 

நாங்கள் உண்மையில் அடித்தளமிட்ட கட்சி. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் கட்சி சிறியதாக இருக்கலாம், ஆனால் எங்கள் கட்சியின் தலைவர் நாடு முழுவதும் மதிக்கப்படுகிறார் என்று படேல் கூறினார்.

எதேசியவாத காங்கிரஸ்  மாநாட்டில் மூத்த தலைவர்களான பிசி சாக்கோ, சாகன் புஜ்பால், சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல், அமோல் கோல்ஹே மற்றும் ஃபௌசியா கான் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

மகாராஷ்டிரத்தின் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார், கரோனா தொற்று சமயத்தில் நிதியமைச்சகத்தை அவர் கையாண்டதை பவாரின் மகள் சுலே பாராட்டியபோது, ​​பலத்த ஆரவாரம் எழுந்தது.

எவ்வாறாயினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வாரிசாகக் கருதப்படும் அஜித் பவார், இறுதிப் பேச்சாளராக அழைக்கப்பட்டபோது அவர் காணவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com