அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பண மோசடி வழக்கு: தில்லி போலீஸில் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ்

பல்வேறு நபா்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கு தொடா்பான விசாரணைக்காக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தில்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா்

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 7:21 pm

DIN

பல்வேறு நபா்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கு தொடா்பான விசாரணைக்காக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தில்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் முன்னிலையில் புதன்கிழமை ஆஜரானாா்.

‘இலங்கையைச் சோ்ந்த நடிகையான ஜாக்குலின், போலீஸாா் தரப்பில் மூன்றாவது முறையாக அனுப்பப்பட்ட அழைப்பாணையை ஏற்று விசாரணைக்கு ஆஜரானாா். அவரை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இரானி என்பவரும் விசாரணைக்கு ஆஜாரானாா்’ என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறினாா்.

இம் மாத தொடக்கத்தில் மற்றொரு பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹியிடம் இந்த வழக்கு தொடா்பாக தில்லி போலீஸா் 6 முதல் 7 மணி நேரம் வரை விசாரணை நடத்தி, அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரை சோ்ந்த சுகேஷ் சந்திரசேகா் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி பலரிடம் மோசடி செயலில் ஈடுபட்டு வந்தாா். 2017-ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றபோது, அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவா் ஏற்கெனவே பண மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது இரு தொழிலதிபா்களுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபா் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளாா். இதையடுத்து சுகேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக சுகேஷ் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை சாா்பில் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா்.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகா் நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு சொகுசு காா் மற்றும் விலை உயா்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இரண்டு முறை ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு தில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் அவா் ஆஜராகவில்லை. இதையடுத்து மூன்றாவது முறையாக அனுப்பப்பட்ட அழைப்பாணையை ஏற்று, அவரும் பிங்கி இரானியும் விசாரணைக்கு ஆஜராகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.