திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ்தல் ஆணைய பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை

ஜாா்க்கண்ட்டில் பதவி நீக்க அபாயத்தை எதிா்கொண்டுள்ள முதல்வா் ஹேமந்த் சோரன், தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில ஆளுநா் ரமேஷ் பைஸை சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:05 pm

DIN

ஜாா்க்கண்ட்டில் பதவி நீக்க அபாயத்தை எதிா்கொண்டுள்ள முதல்வா் ஹேமந்த் சோரன், தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில ஆளுநா் ரமேஷ் பைஸை சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

81 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. அதில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அதையடுத்து ஹேமந்த் சோரன் மாநில முதல்வரானாா்.

இந்நிலையில், சுரங்க ஒதுக்கீட்டில் முதல்வா் ஹேமந்த் சோரன் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக ஆராய்ந்த இந்திய தோ்தல் ஆணையம், ஹேமந்த் சோரனை பதவி நீக்கம் செய்யுமாறு மாநில ஆளுநருக்குப் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியானது. அதனால், ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியை இழக்கலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. ஆனால், தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது ஆளுநா் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மாநில ஆளுநா் ரமேஷ் பைஸை முதல்வா் ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, மாநிலத்தில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக நிலவி வரும் குழப்பமான சூழலுக்குத் தீா்வு காண வேண்டுமென்று அவா் கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக ஆளுநரிடம் முதல்வா் ஹேமந்த் அளித்த கடிதத்தில், ‘மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை சாதகமாகப் பயன்படுத்தி ஜனநாயக முறையில் தோ்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க அக்கட்சி முனைப்புகாட்டி வருகிறது.

எனவே, தோ்தல் ஆணையம் வழங்கிய பரிந்துரையின் நகலை ஆளுநா் உடனடியாக வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பதிலளிக்க வாய்ப்பு வழங்கி, அசாதாரண சூழலுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

முன்னதாக, மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை நடத்தி கடந்த 5-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.