ஜம்மு-காஷ்மீர்: மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் வீட்டில் குண்டு வெடிப்பு!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் வீட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் வீட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூரன்கோட் தாலுகாவின் பஸ்லாபாத் கிராமத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் சோஹைல் மாலிக்கின் வீட்டிற்கு வெளியே மர்ம முறையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
இந்த குண்டு வெடிப்பு குறைந்த தீவிரம் கொண்டதால், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
,
வீட்டிற்கு வெளியே கார் நிறுத்துமிடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால், மாலிக்கின் கார் சேதமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...