பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க புதிய இணையதளம்: மணிப்பூர் முதல்வர்

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்.

இந்த இணையதளத்தில் ஊழல் தடுப்பு பிரிவுக்கான தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இது முக்கியமாகப் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், ஊழல் தொடர்பான பிரச்னைகளை பதிவு செய்வதற்கும் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். மேலும் ஊழல் தொடர்பான பிரச்னைகளை எழுப்புவதற்கான ஏற்ற தளமாக இது அமையும் என்று முதல்வர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இது நிர்வாகத்திலும் பொதுச் சேவைகளை வழங்குவதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையைக் கொண்டு வர எங்களுக்கு மேலும் உதவும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com