இண்டிகோ விமானத்தில் ஹிந்தி தெரியாததால் தெலுங்கு மொழி மட்டுமே தெரிந்த பெண் ஒருவர் வேறு இருக்கைக்கு மாற கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதற்கு தெலங்கானா அமைச்சர் கே.டி.ரமா ராவ் கண்டனம் தெரிவித்து, உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், அவசர வெளியேற்றம் அருகேவுள்ள இருக்கையில் பெண் பயணி அமர்ந்துள்ளார்.
தெலுங்கு மட்டுமே தெரிந்திருந்த அவர், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரியாததால், அவசர இருக்கை அருகேயிருந்து வேறு இருக்கையில் அமர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இதனை உடன் பயணித்த சக பயணி சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், இண்டிகோ நிறுவனம் உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். உள்ளூர் பயணிகளுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. பிராந்திய வழிகளில் விமானங்களை இயக்கும்போது தமிழ், உள்ளூர் மொழிகளை அறிந்த பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். இதுவே இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


