டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உ.பி. பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் பேரணி

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியினர் பேரணியாக செல்கின்றனர்.

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 5:33 am

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியினர் பேரணியாக செல்கின்றனர்.

உ.பி.யில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதாவ் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், இன்று உ.பி. சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பேரவை நோக்கி சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலிருந்து அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாக செல்கின்றனர்.

இந்த பேரணி குறித்து உ.பி. துணை முதல்வர் மௌரியா கூறுகையில்,

சமாஜ்வாதி போராட்டத்திற்கும் மக்களின் நலனுக்கும் தொடர்பில்லை. பிரச்னையை பற்றி விவாதிக்க வேண்டுமானால், சட்டப்பேரவையில் அதைச் செய்யலாம். எங்கள் அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மக்களுக்கு பிரச்னைகளையே உருவாக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.