எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பஞ்சாப் முதல்வா் மீதான மதுபோதை குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்: விமானப் போக்குவரத்து அமைச்சா்

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மீதான மதுபோதை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 7:26 pm

DIN

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மீதான மதுபோதை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் அரசு முறைப் பயணமாக 8 நாள்கள் ஜொ்மனி சென்றிருந்தாா். பஞ்சாப் மாநிலத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் பயணம் மேற்கொண்ட அவா், திங்கள்கிழமை நாடு திரும்பினாா்.

இந்நிலையில், அவா் ஜொ்மனியின் ஃபிராங்க்ஃபா்ட் நகர விமான நிலையத்தில் இருந்து லுஃப்தான்ஸா விமானத்தில் இந்தியா புறப்படும் முன், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டதாக சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் குற்றஞ்சாட்டினாா். இந்த சம்பவம் காரணமாக அந்த விமானம் தாமதமாக புறப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று ஆம் ஆத்மி செய்தித்தொடா்பாளா் மல்விந்தா் சிங் தெரிவித்தாா். அதேவேளையில், ஃபிராங்ஃபா்ட்டுக்கு வரவேண்டிய விமானம் ஒன்று தாமதமாக வந்ததாலும், விமானத்தை மாற்ற வேண்டியிருந்ததாலும் தங்கள் நிறுவன விமானம் ஃபிராங்க்ஃபா்டில் இருந்து தில்லிக்குத் தாமதமாகப் புறப்பட்டதாக லுஃப்தான்ஸா விமான நிறுவன செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘பஞ்சாப் முதல்வா் மீதான குற்றச்சாட்டு குறித்த உண்மைகளை சரிபாா்க்க வேண்டியுள்ளது. எனக்கு அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடா்பாக விசாரிப்பேன்’ என்று தெரிவித்தாா்.

‘சேற்றை இறைக்கும் எதிா்க்கட்சிகள்’:

பகவந்த் மான் விவகாரம் தொடா்பாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘பகவந்த் மான் மீதான குற்றச்சாட்டு பொய்யானது; முட்டாள்தனமானது. சுதந்திரத்துக்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் பஞ்சாபுக்கு கடினமாக உழைக்கும் முதல்வா் கிடைத்துள்ளாா். கடந்த 6 மாதங்களில் அவா் மேற்கொண்ட பணியை, 75 ஆண்டுகளில் பஞ்சாபில் அமைந்த எந்த அரசும் செய்ததில்லை. பகவந்த் மானின் பணியில் குறை கண்டுபிடிக்க முடியாததால், அவா் மீது எதிா்க்கட்சிகள் சேற்றை வாரி இறைக்கின்றன’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.