தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ரூ.20-க்கு மாணவிகளின் ஆபாச விடியோக்கள்: டிவிட்டரில் வியாபாரம்- வலுக்கும் கண்டனங்கள்

மாணவிகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச விடியோக்களை டிவிட்டரில் 20 - 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தில்லி மகளிர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. 

Published On :

மாணவிகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச விடியோக்கள் டிவிட்டரில் 20 - 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தில்லி மகளிர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. 

மாணவிகளின் ஆட்சேபகரமான விடியோக்கள் விற்பனை செய்யும் தளமாக சுட்டுரை மாறி வருவதாகவும் தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வேதனை தெரிவித்துள்ளார். 

சண்டீகர் பல்கலைக் கழகத்தில் கல்லூரி மாணவிகளின் குளியலறை விடியோக்கள் இணையத்தில் பரவிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சுட்டுரையில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாலியல் விடியோக்கள் பணத்திற்காக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை விற்பனை செய்ய ஆபாச படத் தளங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளமான சுட்டுரை தற்போது ஆபாச விடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறி வருவதாக மகளிர் அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன. 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், சுட்டுரையில் 20 - 30 ரூபாய்க்கு மாணவிகளின் ஆபாச விடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளின் ஆபாச விடியோக்களை விற்பனை செய்யும் தளமாக சுட்டுரை மாறி வருகிறது. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் விடியோக்கள் சுட்டுரையில் அதிகம் பகிரப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் பெண்கள் குறித்த ஆபாச விடியோக்கள் அதிகம் பரப்பப்பட்டு வருவது வேதனை அளிப்பதாகவே உள்ளதாக மகளிர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.