மங்களூரு: மங்களூருவில் இயங்கும் மூன்று தனியார் கல்லூரியின் விடுதியிலிருந்து ஒரு சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன 3 மாணவிகள், சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மாநகர காவல்துறை ஆணையர் ஷஷி குமார் கூறுகையில், பெங்களூருவைச் சேர்ந்த 2 மாணவிகளும், சித்ரதுர்காவைச் சேர்ந்த ஒரு மாணவியும் கல்லூரி விடுதியிலிருந்து காணாமல் போயினர்.
காணாமல் போன வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவிகள் சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெற்றோரை சந்திக்க அச்சம் கொண்டு, விடுதியில் இருந்து கிளம்பி சென்னை சென்றுள்ளனர். அங்குள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்த மாணவிகள், தங்களிடம் செல்லிடப்பேசி இல்லாததாலும், உறவினரை தொடர்பு கொள்ள முடியாததாலும், சென்னையில் அங்கும் இங்கும் சுற்றியலைந்துள்ளனர்.
இந்தநிலையில், காவல்துறையினர் அவர்களை மீட்டு விவரங்களை சேகரித்து மங்களூரு காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
மங்களூரு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. மாணவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், மாதத்துக்கு ஒரு முறையாவது மாணவர்கள் பெற்றோரை சந்திக்க விடுதிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


