ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 2 குழந்தைகள் பலி

ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலியானார்கள்.  

News image
Updated On :25 செப்டம்பர் 2022, 10:47 am

DIN

ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலியானார்கள். 

ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில் புதிததாக கட்டப்பட்ட கார்த்திகேயா மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

எனினும், இந்த விபத்தில் சிக்கி சித்தார்த்த ரெட்டி (12) மற்றும் கார்த்திகா (6) ஆகியோர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேசமயம் குழந்தைகளின் பெற்றோர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.