ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 2 குழந்தைகள் பலி

ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலியானார்கள்.  
ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 2 குழந்தைகள் பலி
Published on
Updated on
1 min read

ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலியானார்கள். 

ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில் புதிததாக கட்டப்பட்ட கார்த்திகேயா மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

எனினும், இந்த விபத்தில் சிக்கி சித்தார்த்த ரெட்டி (12) மற்றும் கார்த்திகா (6) ஆகியோர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேசமயம் குழந்தைகளின் பெற்றோர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com