நாட்டில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா; 23 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 23 பேர் உயிரிழந்தனர். 
நாட்டில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா; 23 பேர் பலி
Published on
Updated on
1 min read

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 23 பேர் உயிரிழந்தனர். 

நேற்று 44,436 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 43,994-ஆக குறைந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,510ஆக அதிகரித்துள்ளது. 

இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,63,151 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 217.54 கோடி தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.72 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com