ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் எழுந்துள்ள நிலையில், முதல்வா் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவா் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
முதல்வா் அசோக் கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பதவி வழங்கக் கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெரும்பாலானோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 80 பேரும், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேரும் தில்லிக்கு வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.