திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

2023-ல் இந்தியாவில் 10.4% ஊதியம் உயர வாய்ப்பு!

மந்தநிலை மற்றும் உள்நாட்டு பணவீக்கம் இருந்தபோதிலும், இந்தியாவில் சம்பளம் 2023 இல் 10.4 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image
2023-ல் இந்தியாவில்  10.4% ஊதியம் உயர வாய்ப்பு!
Updated On :1 பிப்ரவரி 2024, 10:26 am

DIN

பெங்களூரு: மந்தநிலை மற்றும் உள்நாட்டு பணவீக்கம் இருந்தபோதிலும், இந்தியாவில் சம்பளம் 2023 இல் 10.4 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

இது 2022 இல் இது 10.6 சதவீதம் க இருந்தது, இது பிப்ரவரியில் கணிக்கப்பட்ட 9.9 சதவீத அதிகரிப்பை விட சற்று கூடுதல்.

இ-வணிகத் துறையானது 2023 ஆம் ஆண்டில் 12.8 சதவீத ஊதிய உயர்வுடன் முன்னணியில் இருக்கும், அதைத் தொடர்ந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 12.7% என்ற அளவில் இருக்கும் என்று திங்கள்கிழமை வெளியான ஆன் இந்தியாவின் 28-வது ஆண்டு வருமான உயர்வு குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தாண்டி, ஹை-டெக், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப-செயலாக்கும் சேவை ஆகியவற்றிலும் 11.3 சதவீதமும் நிதி மையங்களில் 10.7 சதவீதமும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 20.3 சதவீதமாக உயர்ந்த நிலையில், 2021 இல் பதிவுசெய்யப்பட்ட 21 சதவீதத்தை விட சற்றே குறைவாக இருந்ததால்ல், சம்பளத்தின் மீதான அழுத்தம் நீடிக்கும் என்றே கருதப்படுகிறது. அதே வேளையில், அனைத்துத் துறைகளிலும் சம்பளம் அதிகரிக்கும் என்ற நல்ல தகவலையும் கணக்கெடுப்பு பதிவு செய்துள்ளது.

40 க்கும் மேற்பட்ட தொழில்துறைகளில் இருக்கும் 1,300 நிறுவனங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு கூறுவது என்னவென்றால், இந்தப் போக்கு அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதே.

எவ்வாறாயினும், நிறுவனத் தலைவர்கள் தங்கள் பணியாளர்கள் இன்றும், எதிர்காலத்திலும் நிறுவனத்துக்கு நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் மொத்த பயன்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் உயரும் செலவுகள் மற்றும் சம்பளம் மீதான அழுத்தங்களின் தாக்கத்தை ஒப்பிட்டு, அதிக திறமைக்கான தற்போதைய தேவையுடன் சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.