டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

‘ஆதார் இருந்தால்தான் உணவு‘: திருமணத்தில் கட்டுப்பாடு; கடுப்பான உறவினர்கள்

திருமண நிகழ்வில் ஆதார் அட்டை கொண்டு வந்தவர்களுக்கு மட்டும் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 11:05 am

DIN

திருமண நிகழ்வில் ஆதார் அட்டை கொண்டு வந்தவர்களுக்கு மட்டும் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் திருமண நிகழ்வில் போட்டோ ஷூட், உணவு, அலங்காரம் என அனைத்து ஏற்பாடுகளிலும் புதுமையைகாட்டி உறவினர்களின் கவனத்தை மணமக்கள் வீட்டார் ஈர்த்து வரும் சூழலில், வித்தியாசமான அணுகுமுறையால், நாட்டு மக்களின் கவனத்தை ஒரு திருமணம் ஈர்த்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் உணவு அரங்கிற்குள் ஆதார் அட்டை காட்டும் விருந்தினர்களை மட்டுமே பெண்வீட்டார் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு வழங்கப்படாததால், பலரும் எரிச்சலுடன் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பெண்வீட்டார் தரப்பில் கூறுகையில், அந்த மண்டபத்தில் சகோதரிகள் இரண்டு பேருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஆதார் உள்ளவர்களை மட்டும் அனுமதித்ததாக தெரிவித்தனர்.

மேலும், இந்த திருமணத்தில் நடந்த சம்பவத்தை விடியோ எடுத்த சில விருந்தினர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.