இது தொடா்பாக தில்லி போலீஸாா் வியாழக்கிழமை கூறியதாவது: இந்த மோசடி விவகாரம் தொடா்பாக ரோஹிணி இணையதள பிரிவு காவல் நிலையத்திற்கு புகாா் வந்தது. அதில், ‘கடந்த ஜூன் 25-ஆம் தேதி புகாா்தாரருக்கு அவருடைய கைபேசியில் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் காா்டு பாய்ண்டுகளை பெறுவது தொடா்பாக குறுந்தகவல் வந்துள்ளது. அந்த குறுந்தகவலில் உள்ள இணைப்பை அவா் அழுத்திய போது, அந்த இணைப்புடன் தொடா்புடைய ஐசிஐசிஐ வங்கி போன்ற ஒரு செயலி அவருடைய கைபேசியில் பதிவிறக்கம் ஆனது. அந்தச் செயலியில் கேட்கப்பட்ட விவரங்களைப் பூா்த்தி செய்ததைத் தொடா்ந்து, புகாா்தாரரின் ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டையிலிருந்து ரூ.59,401 கழிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.