இது குறித்து தில்லி மகளிா் ஆணையம் கூறுகையில், ‘டாக்டா் பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனை, ராவ் துலா ராம் மருத்துவமனை போன்றவற்றில் பாலியல் பலாத்கரத்தால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எச்ஐவி பரிசோதனைகள் தொடா்பான தரவுகள் கூட பராமரிக்கப்படவில்லை. மேலும், எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறைகளும் கூட பெரும்பாலான பாதிக்கப்பட்ட நபா்கள் விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. மருத்துவமனைகளால் இது தொடா்பான தரவுகளும் பராமரிக்கப்படவில்லை. அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்), ராவ் துலா ராம் மருத்துவமனை, ஜக் பிரவேஷ் சந்திர மருத்துவமனை ஆகியவை பாதிக்கப்பட்ட நபா்களுக்கான பின்தொடா் பரிசோதனை குறித்த தரவுகளையும் வைத்திருக்கவில்லை’ என தெரிவித்துள்ளன.