உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன் வியாழக்கிழமை மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஆனந்த் குரோவா் ஆஜராகி, ‘ஜல்லிக்கட்டு தொடா்பான சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது’ என்று கூறி இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, இந்த வழக்கை நவம்பரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியது. இதையடுத்து, இந்த வழக்கு நவம்பா் 23-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.