பெங்களூரு: மிக விரைவான, மிக எளிதான பயணத்தை ஏற்படுத்தித் தரும் பெங்களூரு மெட்ரோ ரயிலில் தற்போது ஒரு நாள் மற்றும் 3 நாள்களுக்கு என அளவில்லா பயணச் சலுகைத் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் இந்த சலுகைத் திட்டம், ஒரு நாள் மற்றும் மூன்று நாள்களுக்கென தனித்தனி பாஸ்களை பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ரூ.200 பாஸ் அல்லது மூன்று நாள்களுக்கு ரூ.400 பாஸ் பெற்றுக் கொண்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதில் திரும்ப செலுத்தத்தக்க ரூ.50 வைப்புத் தொகையும் அடங்கும். இந்த பயணப் பாஸ் வைத்திருப்போர், அந்த குறிப்பிட்ட நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் நம்ம மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
இந்த பாஸ்கள் ரயில் நிலைய டிக்கெட் வழங்கும் மையங்களிலேயே கிடைக்கும். இந்த பாஸை எந்த ரயில் நிலையத்திலும் ஒப்படைத்து ரூ.50ஐ பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்த பாஸ் முழுமையாக செயல்படும் வகையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.