அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்

நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்துக்குள் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலையடையச் செய்துள்ளது.

News image

அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்

Updated On :16 ஏப்ரல் 2022, 3:13 pm IST


சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் தலைவிரித்தாடும் நிலையில், நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்துக்குள் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலையடையச் செய்துள்ளது.

இதுவரை உலக நாடுகளில் மட்டுமே கரோனா பாதிப்பு அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது நாட்டுக்குள்ளும் அந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. தில்லி, ஹரியானா, குஜராத், கேரளம் மற்றும் மிசோரம் மாநிலங்களிலும் இதுவரை இறங்குமுகமாக இருந்த கரோனா பாதிப்பு எரிபொருள் விலை போல இல்லாவிட்டாலும் ஏறுமுகத்தைக் காட்டியிருப்பது நமக்கெல்லாம் அந்த முகக்கவசம் அணிந்திருக்கும் பழைய முகத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.

இது குறித்து கரோனா தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் முளியில் கூறுகையில், இது ஒரு திடீரென ஏற்பட்ட மாற்றம். அதுவும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பாதிப்புதான். இதை வைத்து மட்டும், அடுத்த அலை உருவாகிவிடும் என்று கூறிவிட முடியாது என்கிறார்.

இதேக் கருத்தைத்தான், பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பின் தலைவர் பேராசிரியர் கே.எஸ். ரெட்டியும் கூறுகிறார். அடுத்த அலை உருவாகும் என்று இவ்வளவு விரைவாகக் கூறிவிட முடியாது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒட்டுமொத்த மக்களும் சுதந்திரமாக வெளியே வருகறிர்கள். அப்போது ஒரு திடீர் அதிகரிப்பு இருக்கத்தான் செய்யும் என்கிறார்.

அதேவேளையில், ஐஐடி-கான்பீர், ஜூன் இறுதியில் நாட்டில் நான்காவது அலை உருவாகும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் தீவிரமடையும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் மறுஆய்வுக்குள்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல நாடுகளிலும் இப்படி எண்ணிக்கை சற்று அதிகரித்து மீண்டும் குறையத் தொடங்கியது. எனவே, சற்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் ஐஐடி-கான்பூரைச் சேர்ந்த டாக்டர் அகர்வால்.

மேலும், இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 - 1200 புதிய கரோனா பாதிப்பு பதிவாகிறது. சில மாநிலங்களில் 100 - 150 நோயாளிகள் நாள்தோறும் புதிதாக பதிவாகிறது. இது குறைந்தபட்ச எண்ணிக்கைதான். எனவே நாம் தற்போது அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடாது என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.