பாட்னா: படகில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

பாட்னாவின் மானேர் பகுதியில் கங்கை ஆற்றின் நடுவில் மோட்டார் படகிலிருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

பாட்னாவின் மானேர் பகுதியில் கங்கை ஆற்றின் நடுவில் மோட்டார் படகிலிருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மோட்டார் படகில் மாலுமி ஒருவர் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது சிலிண்டரில் இருந்து எல்பிஜி கசிவு ஏற்பட்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டது. 

மோட்டார் படகு ஆற்றில் மூழ்காததால், மற்ற மாலுமிகள் கங்கை ஆற்றின் கரைக்குக் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் மானேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த மோட்டார் படகுகள் பொதுவாக மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான படகுகளை மணல் கடத்தல் கும்பல் இயக்கி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com