உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சட்டவிரோதமாக நிலத்தை விற்பனை செய்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக எம்.எல்.ஏ. பிரகாஷ் குப்தா, அயோத்தியா மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் உள்பட 40 பேர் அயோத்தியில் சட்டவிரோத நில விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
நிலத்தை விற்பனை செய்தும், கட்டடங்களைக் கட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தற்போது அம்பலமாகியுள்ளதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் அரசு விதிமுறைகளுக்கு மாறாக நிலத்தை விற்பனை செய்தவர்களின் பட்டியலை அயோத்தியா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், பாஜக எம்.எல்.ஏ., அயோத்தியா மேயர் பிரகாஷ் குப்தா உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அயோத்தியில் சட்டவிரோதமாக நிலத்தை விற்பனை செய்தும், கட்டடங்களைக் கட்டியும் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 40 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அயோத்தியா மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் விஷால் சிங் தெரிவித்துள்ளார்.