புது தில்லி: 10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை அஞ்சல் துறை விற்பனை செய்துள்ளது.
இந்திய அஞ்சல் துறை மூலம் 10 நாள்களுக்குள் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக குடிமக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகளை விற்பனை செய்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசியக் கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இணையதளத்தின் மூலம் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகள் விநியோகிக்கப்படுகிறது.
இணையதளம் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் குடிமக்களுக்கு தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நல் ஆளுமை விருது: தமிழக அரசு அறிவிப்பு
இதற்கு நாடு முழவதும் 4.2 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் உதவி செய்கிறார்கள் என தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.