சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இந்தியா - பாக். எல்லையில் ஆயுதங்கள் பறிமுதல்

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

News image
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:08 am

DIN

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் அருகேவுள்ள சர்வதேச எல்லையில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மூன்று ஏகே47 ரக துப்பாக்கிகள், மூன்று எம்3 ரக துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அப்பகுதியிலிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இந்த துப்பாக்கிகள் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, பாகிஸ்தானிலிருந்து, ஜம்மு சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளால் இயக்கப்பட்ட டிரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.