தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பஞ்சாப்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை

பஞ்சாப் மாநிலம், பாம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 9:20 am

DIN

பஞ்சாப் மாநிலம், பாம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலிஜித் சிங் காக் கூறுகையில், 

கியாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்தது தெரிய வந்தது. கொள்ளையர்கள் காரில் வந்த தடயங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் அதிகாலை 2.40 மணியளவில் நடந்ததாகவும், கொள்ளையர்கள் சுமார் ரூ17 லட்ச பணத்தை எடுத்துச் சென்றதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பாம் கிளை) உதவி மேலாளர் ஜஸ்வீர் சிங் கூறினார். 

சப்பேவால் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்களைத் தேடி வருவதாகவும் அவர்  கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.