எரிபொருள் விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நட்டமடைந்து வருவதாக பிரபல விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பாண்டு இரண்டாவது காலாண்டில் ரூ.789 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மோடி அரசினால் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: சந்திரசேகர் ராவ்
இதுவே கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.729 கோடி நட்டம் ஏற்பட்டிருந்தது. கரோனா தொற்று பரவலால் ஏற்கெனவே நட்டத்தை சந்தித்து வந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான எரிபொருளுக்கான விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் விமானப் பணியாளர்களுக்கான சம்பளத் தொகை இரண்டாவது மாதமாக தாமதமாகி உள்ளதாக பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தங்களுக்கான சம்பளத் தொகை நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ள பணியாளர்கள் விமான நிறுவனம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









