மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளினால் அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்துவருவதாக தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்றார்.
இதையும் படிக்க | இரண்டரை ஆண்டுகளில் 13 முறை உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ், “மோடி ஆட்சிக்கு முந்தைய காலத்தில் ரூபாய் மதிப்பு இந்தளவு வீழ்ந்ததில்லை. மோடி அரசுக்கு எதிராக ஆண்டு முழுவதும் விவசாயிகள் ஏன் போராடினார்கள்? ஒவ்வொரு துறையிலும் நாடு மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆட்சியில் உள்ள பாஜக அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழித்து விடுவோம் எனத் தெரிவிப்பது அவமானகரமானது” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “நிதீஷ் குமார் நாட்டின் மூத்த அரசியல் தலைவர். நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.