இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

டிச. 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு!

குஜராத்தில் பாஜக அரசு வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கும் என்று மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:33 pm IST

குஜராத்தில் பாஜக அரசு வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கும் என்று மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்று வருகின்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 158 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. 

குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இதக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி, குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்கும் என்று தெரிவித்துள்ளார். 

தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்றுக்கொள்வார் என்றும் கூறினார். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.