ஹிமாசலின் அடுத்த முதல்வராக காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் குழுவை வழிநடத்திய சுக்விந்தர் சிங் சுகுவினை அறிவித்துள்ளது காங்கிரஸ்.
முகேஷ் அக்னிஹோத்ரி ஹிமாசலின் துணை முதல்வராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
58 வயதான சுக்விந்தர் சிங் ஹமீர்பூர் மாவட்டத்தின் நாடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் ஹிமாசலின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார். ஹிமாசலின் புதிய முதலமைச்சராக அவர் நாளை (டிசம்பர் 11) உறுதிமொழி எடுத்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று அண்மையில் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.