இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 67,597 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 67,597 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,188 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 1,80,456 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,02,874 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,08,40,658 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி உரை
இன்றைய நிலவரப்படி 9,94,891 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 1.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.