குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினாா். அவரது உரை மீதான விவாதம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த விவாதத்தின் மீது நேற்று மக்களவையில் உரையாற்றிய மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதையும் படிக்க | ஆட்சியை இழந்தாலும் ஆணவம் அடங்கவில்லை: பிரதமா் நரேந்திர மோடி
இந்நிலையில், இன்று மாநிலங்களவையிலும் விவாதங்களின் மீதான தனது உரையை நிகழ்த்தவுள்ளார்.