சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

News image
மம்தா பானர்ஜி / மு.க.ஸ்டாலின்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:23 am

DIN


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கிய நிலையில், முதல்வர் மம்தாவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவருடன் முதல்வர் உரையாடினார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ஆம் தேதி முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது சட்டப்பேரவையை அவர் முடக்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைப்பேசியில் அழைத்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதில் மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது, பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து மம்தாவிடம் பேசினேன். மாநிலங்களின் உரிமையைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என மம்தாவிற்கு உறுதியளித்தேன்.

மாநில சுயாட்சியை காக்க திமுக போராடும். எதிர்க்கட்சிகளின் மாநாடு தில்லியில் விரைவில் நடக்கவுள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.