மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கிய நிலையில், முதல்வர் மம்தாவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவருடன் முதல்வர் உரையாடினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ஆம் தேதி முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது சட்டப்பேரவையை அவர் முடக்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைப்பேசியில் அழைத்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில் மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது, பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து மம்தாவிடம் பேசினேன். மாநிலங்களின் உரிமையைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என மம்தாவிற்கு உறுதியளித்தேன்.
மாநில சுயாட்சியை காக்க திமுக போராடும். எதிர்க்கட்சிகளின் மாநாடு தில்லியில் விரைவில் நடக்கவுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


