வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஐந்து மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஜனவரி 2022, 11:34 am

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 

முழு விவரம்:

முதற் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10ஆம் தேதி
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 14ஆம் தேதி
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 20ஆம் தேதி
நான்காம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 23ஆம் தேதி 
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27ஆம் தேதி
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3
கடைசி கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 7

பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மணிப்பூரை பொறுத்தவரை வாக்குப்பதிவு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

முக்கிய தகவல்கள்:

  • ஐந்து மாநிலங்களில் மொத்தம் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. 
  • வேட்பு மனுக்களை இணையத்தில் தாக்கல் செய்யலாம்.
  • ஐந்து மாநிலங்களில் 18.34 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.
  • வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வரும் ஜனவரி 15 வரை, பேரணிகளுக்கு அனுமதி இல்லை.
  • கரோனாவால் பாதிக்கப்பட்டோர் தபாம் மூலம் வாக்களிக்கலாம்.
  • இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரசாரத்திற்கு தடை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.