கேரளத்தில் புதிதாக 5,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,
கேரளத்தில் புதிதாக 5,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,796 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
37, 736 பேர் தற்போது கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 49,757 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கேரளத்தில் புதிதாக இன்று 17 பேர் உள்பட ஒமைக்ரான் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 345 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் இறப்பு, திருமண நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள்