உத்தரகாண்ட்: கோட்வார் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோட்வார் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல், பாதுகாப்புப் பணிக்காக வந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 50 ஆவது பட்டாலியனின் 'இ' நிறுவனத்தில் இருந்து வந்த 82 வீரர்களில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்."
மேலும் "கோட்வார் தொகுதி தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த வீரர்கள் அனைவரும் பூஜ் எல்லையில் நிறுத்தப்பட்டனர். பின்னர் செவ்வாய்க்கிழமை கோட்வார் வந்தடைந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அதில் 30 வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.
இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புதன்கிழமை, நாட்டில் புதிதாக 1,94,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட 27 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


