ஒடிசாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கடந்த 18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான சுகந்த நாயக் என்பவர் கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலம் பேலாசூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறை கரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இரண்டு முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் மீண்டும் சுகந்த நாயக்கிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவில் இதுவரை 50 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள், 11 அமைச்சர்கள் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!

”தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்!” MK Stalin வெளியிட்ட விடியோ | DMK

உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

