தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.

ஒடிசாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கடந்த 18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :13 ஜனவரி 2022, 4:48 pm IST

ஒடிசாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கடந்த 18 மாதங்களில் 3-வது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான சுகந்த நாயக் என்பவர் கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒடிசா மாநிலம் பேலாசூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறை கரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டார். 

இரண்டு முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் மீண்டும்  சுகந்த நாயக்கிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இதுவரை 50 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள்,  11 அமைச்சர்கள் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.