விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாட்டில் 15-18 வயதுடைய 3 கோடி பேருக்கு தடுப்பூசி: மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் 3 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜனவரி 2022, 7:45 am

இந்தியாவில் 3 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கடந்த ஜன.3 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 3 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.