நாட்டில் 15-18 வயதுடைய 3 கோடி பேருக்கு தடுப்பூசி: மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் 3 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் 3 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கடந்த ஜன.3 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 3 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com