‘3 மாநிலங்களில் ஆட்சிக்கு வருவோம்’: மகாராஷ்டிர காங். தலைவர்

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என மகாராஷ்டிர தலைவர் நானா படோல் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர தலைவர் நானா படோல்
மகாராஷ்டிர தலைவர் நானா படோல்
Published on
Updated on
1 min read

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என மகாராஷ்டிர தலைவர் நானா படோல் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இந்நிலையில் தேர்தல் குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் கூறியதாவது:

கோவா, பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com